Sunday, January 5, 2014

கீரைகள்

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கீரைகள் :
************************************

உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அள் ளித்தரும் முருங்கைக் கீரை, அரைக் கீரை, சிறு கீரை, முளைக் கீரை, பொன்னாங் கண் ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை ஆகிய ஆறு வகையான கீரைகளைப் பற்றி இங்கு சுருக்க‍மாக பார்ப்போம்.

முருங்கைக் கீரை:

இதை நெய்யில் பொரியல் செய்து உணவி ல் சேர்த்து வந் தால் நாளடைவில் ஆண்களுக்கு வாலிபமும், வீரியமும்,

தாது விருத்தியும் உண்டாகு ம் இதை உணவில் 40 நாட்கள் சாப்பி ட்டால் இல்லற வாழ்க் கையில் இன்பம் உண்டாகு ம். மேலும் இரத்தசோகை யை தடுக்கும், இரத்த விருத் தியை உண் டாக்கும்.

அரைக்கீரை:

இதை சாப்பிட்டுவர பித்தம் தொட ர்புடைய அனைத்து வியா திகளும் குணமடையும். அதிகளவில் சிறு நீர் இறங்குவதை, கட்டுப்படுத்தி இரத்த பிரமேகம் என்னும் வியாதி யைக் குணப்படுத்த வல்லது.

சிறு கீரை:

சிறுகீரையைப் பற்றி தெரியாதவர் யாருமில்லை. சிறுகீரை செம்புச்சத் தும், உஷ்ணவீர்யமும் உடையது. கு டல், இருதயம், மூளை, ரத்தம் இவை களுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர் த்துக்கொண்டு வந் தால் இருதய வியாதிகள் போகும்.

முளைக்கீரை:

முளைக்கீரையை உண்ணுவ தால் சொறி, சிரங்கு, நரம்பு தள ர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியடையும், மாலைக் கண் பார்வை குறைவு நீங்கும். அஜீரணக்கோளாறு, வயிற்றுப் புண் சரியாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரை:

பொன்னைக் காடுத்து, பொன்னாங்கண்ணி வாங்குஎன்று பழமொழி உண்டு. இக்கீரை கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்க ளையும் குணமாக்க வல்லது. இக்கீ ரையை வெண்ணெய் சர்த்து உண் ண கண் சம்பந்தப்பட்ட 96 வியாதி கள் நீங்கும் இக்கீரையை உண்பதா ல் வாய்ப்புண், வாய் நாற்ற ம், ஈரல் நோய், மூலச்சூடு, கைகால் எரிவு, உலர்த்து மேகம்,வள்ளை வயிற்றெரிச்சல், வாத தோடம், தேகச்சூடு முதலிய வியாதி கள் நீங்கும்.

No comments:

Post a Comment