Wednesday, April 2, 2014

பேரீச்சையின் மருத்துவ பயன்பாடு :-


உலகின் பழமையான நாகரீகமான மெசபடோமியாவில் தான் பேரீச்சம்பழம் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம்பெற்றுள்ள பேரீச்சம் பழம், கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துப்பழமாக உலக மக்களால் உண்ணப்பட்டு வருகிறது. பேரீச்சம்பழத்தின் மருத்துவக் குண பெருமைகள்...
* ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டிய அருமையான பழம்.
* தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப் பெறும்.
* தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.
* ஏதாவது காயத்தால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் ரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.
* பேரீச்சம்பழச் சாறு பருகுவது, ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
* பேரீச்சம்பழத்தை அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து சாப்பிட்டு வர, எலும்புகள் வலுப்பெறும், உடல் வலிமை கூடும்.
* தினமும் இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு, வெந்நீர் அருந்தினால், மலச்சிக்கலை ஏற்படுத்தும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி, மலம் சுலபமாக வெளியேறும்.
* பேரீச்சம்பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட்டால் வாதம், பித்தம், முட்டி வீக்கம் போன்றவை குணமாகும்.
* பேரீச்சம் கொட்டையையும் வறுத்துப் பொடி செய்து காபி போல பால், சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.
* பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக்கடுப்பால் அவதியுற நேரலாம். அவர்களுக்கு பேரீச்சம் பழத்தை குழைய வேக வைத்து, வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை கொடுத்தால் பேதிநிற்கும்.

No comments:

Post a Comment