Tuesday, December 24, 2013

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு தகவல்!




நீரிழிவு நோயாளிகள் சீத்தா இலையை(துளிர் மற்றும் பழுத்த இலைகளை எடுக்கக்-கூடாது) மிதமான பச்சை இலைகளை 8க்கு மிகாமல் பறித்து நன்றாக கழுவி 300மில்லி தண்ணீருடன் சேர்ந்து இரவில் கொதிக்கவிட்டு முடி வைத்துவிட வேண்டும். தொடர்ந்து மறுநாள் காலையில் கொதிக்க வைக்க வேண்டும். 200 மில்லி குறையாமல்காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கும் அளவு மிதமான சூட்டில் சாப்பிட்டு வர படிப்படியாக உடம்பில் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். இதன் சுவை உவர்ப்பு, கசப்பு எதுவும் இருக்காது. அருந்துவதற்கு சுவையாக தேநீர் போன்று இருக்கும். மருத்துவரின் ஆலோசனை பெற்று மாத்திரை சாப்பிடுபவர்களும் இந்த சீத்தா இலை மருந்தை சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) சாப்பிட்டு வர, மாத்திரை தேவைப்படாது. சர்க்கரை நோயாளிக் அனைத்து பலகார வகைகளை சாப்பிடலாம். இந்த இலைசாறின் மகிமை உடலில் மாற்றம் ஏற்படுத்துவதுடன், சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. பார்வை கோளாறுகளை சரி செய்யும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும். கால் வலியும் -குணமாகும் என்கிறார் சந்திரசேகரன். மேலும் விபரங்களுக்கு சந்திரசேகரன் அவர்களை 9962636061 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவர் சென்னை அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடதக்கது. காவல் ரோந்து பணியுடன் மக்கள நல பணிகளையும் சேர்ந்து செய்கிறார்.

திருவொற்றியயூரை சேர்ந்த மருத்துவர் வரதராஜனிடம் பேசிய போது,

என்னுடைய அம்மா ரூக்மணி சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தார். நான் பொது மருத்துவர் என்ற முறையில் பல மருந்துகளை கொடுத்தும் சர்க்கரையின் அளவு குறையவில்லை. என்னுடைய பணி நிமிந்தம் காரணமாக சந்திரசேகரன் சந்தித்தேன். அப்போது அவர் இந்த மருந்தை சொன்னார். ஆனால் எனக்கு துளியும் நம்பிக்கையில்லை. ஆனால் முயற்சி செய்து பார்க்கலாம் என்று அம்மாவுக்கு கொடுத்தேன். 15 தினங்கள் சாப்பிடவருக்கு சர்க்கரையின் அளவு 360லிருந்து 160 ஆகிவிட்டது. இதனால் இன்சுலின் மருந்தின் அளவையும் குறைத்துவிட்டேன். இப்போது உடலில் சேர்வு நீங்கி நலமாக இருக்கிறார் என்றார் மருத்துவர் வரதராஜன்.

No comments:

Post a Comment